» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகர் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு: மேயர் தகவல்!
வெள்ளி 14, நவம்பர் 2025 10:40:01 AM (IST)

தூத்துக்குடி மாநகர் முழுவதும் 3000 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் 48 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கங்கா பரமேஸ்வரி நகர் பூங்காவில் நடைபெற்ற துவக்கவிழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ரியங்கா முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் பிண்டோ வில்லவராயர் வரவேற்புரையாற்றினார்.
பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்து பார்வையிட்ட பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் செயல்பாடுகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா பார்வையிட்டனர். பின்னர் மேயர் கூறுகையில் "மாநகராட்சி பகுதியில் 3000 கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும் மழைக்காலங்களில் எந்தெந்த பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதையும் கண்காணித்து அதன் அடிப்படையில் உடனடியாக மழை நீர் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அது போல பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகளை வீசுவதை கண்காணித்து தடுக்க முடியும். ஆகையால் இனி வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகரில் எந்த ஒரு நிகழ்வுகள் நடந்தாலும் மாநகராட்சியில் இருந்து மாநகரை கண்காணிக்க முடியும். மாநகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களுக்கும் இணைப்பு மாநகராட்சி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
கால சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கிறோம் பொதுமக்களும் அதற்கேற்றாற்போல் தாங்களும் மாறி கொள்ள வேண்டும் என்று கூறினார்.நிகழ்ச்சியில் நகர அமைப்பு திட்ட பொறியாளர் ராமலிங்கம், ரோட்டரி கிளப் சங்க செயலாளர் மகாலிங்கம், வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் ஜேஸ்பர், மற்றும் அரசு அலுவலர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்!
சனி 15, நவம்பர் 2025 4:48:55 PM (IST)

பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி கடனுதவி : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
வெள்ளி 14, நவம்பர் 2025 10:24:39 AM (IST)

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: விஜய்வசந்த் எம்.பி கடும் கண்டனம்!
புதன் 12, நவம்பர் 2025 12:53:06 PM (IST)

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை கண்டித்து நாகர்கோவிலில் திமுக ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:37:05 PM (IST)

சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)


.gif)
muthuNov 14, 2025 - 05:51:39 PM | Posted IP 104.2*****