» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாத கழிப்பறைகள்: மக்கள் அவதி!
சனி 4, அக்டோபர் 2025 11:41:35 AM (IST)

குருந்தன்கோடு இந்திரா நகர் காலனியில் பணிகள் முடிந்து 8-வருடங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாத கழிப்பறைகளை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்திரா நகர் காலனி மக்களுக்கு சுகாதார வசதிக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு ஆதி திராவிடர் பிற்படுத்தப்பட்டோர் இந்திரா நகர் காலனி மக்களுக்கு கிராமப்புற தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 - லட்சம் மதிப்பீட்டில் 5- பொது கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் தண்ணீர் இணைப்பு கொடுக்கவில்லை என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரசு பல நலத்திட்டங்கள் வழங்கியும் அது எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
இதுபோன்று பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கும் பயனில்லை எங்களுக்கும் பிரயோஜனம் இல்லை. பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசியமான கழிவறைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திரா நகர் காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவசமாக மனுக்கள் எழுதிகொடுக்க ஏற்பாடு!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:32:00 PM (IST)

மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் பார்மசிஸ்ட் உயிரிழப்பு!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:36:30 PM (IST)
