» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் கனமழை : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 10:13:17 AM (IST)
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (செப். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவில் கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இன்றும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், குமரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறையில் 140 மி.மீ, கோதையாறில் 130 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:18:55 PM (IST)

நுகர்வோர் உரிமைகளை மாணவர்கள் புரிந்து கொண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேச்சு!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆவின் சார்பில் இலவச பயிற்சிகள் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 10:18:50 AM (IST)

சிறுவர்கள் ஓட்டி வந்த 9 பைக்குகள் பறிமுதல்: பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:47:03 AM (IST)

குமரி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் 9,982பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:26:20 AM (IST)
