» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீட்டில் சமையலறையில் 5 குட்டிகளுடன் பதுங்கி இருந்த மரநாய் மீட்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:44:22 AM (IST)
மார்த்தாண்டம் அருகே வீட்டில் சமையலறை பகுதியில் 5 குட்டிகளுடன் பதுங்கியிருந்த மரநாயை தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டனர்.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே புதுக்கடை, தவிட்டவிளையைச் சேர்ந்தவர் ஆன்டணி அருள்தாஸ். இவரது வீட்டின் பின்பகுதியில் சமையலறையையொட்டி விறகுகள் வைக்கப்பட்டிருந்ததாம். அப்பகுதியில் மரநாய் 5 குட்டிகளுடன் இருந்ததை கண்டுள்ளார்.
இதையடுத்து, அவர் குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் வந்து, மரநாய் மற்றும் அதன் 5 குட்டிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். தொடர்ந்து அவற்றை களியல் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை: செப்.6ல் ஆட்கள் தேர்வு!
புதன் 3, செப்டம்பர் 2025 12:22:36 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
