» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற அழைப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:13:14 PM (IST)
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைநிலைப் பொதுத்தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் கவனத்திற்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
செப்டம்பர் 2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே 2022 பொதுத்தேர்வு /ஆகஸ்ட் 2022 இடைநிலை துணைத்தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இந்த செய்திக்குறிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். தவறினால் மேற்படி தேர்விற்குரிய மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை: செப்.6ல் ஆட்கள் தேர்வு!
புதன் 3, செப்டம்பர் 2025 12:22:36 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
