» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 150-வது பிறந்த நாள் விழா : ஆட்சியர் மரியாதை!
திங்கள் 28, ஜூலை 2025 3:17:54 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 150-வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 150-வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது முழு திருவுருவ சிலைக்கு நேற்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலெட்சுமி இணையருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள் மகனாக பிறந்தார் கவிமணி தேசிக விநாயம் பிள்ளை. கவிமணி சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். கவிமணி மலரும் மாலை, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்கள். நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். ஆங்கில மொழியில் எட்வின் ஆர்னால்டு எழுதிய ”லைட் ஆ/ப் ஆசியா” என்ற நூலை தமிழில் ”ஆசிய ஜோதி” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார்.
குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் அத்தகைய குழந்தைகளுக்காக ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கு துள்ளிக் குதிக்குது கன்றுகுட்டி” என்று ரசித்து இசைக்கும் படியான பாடலை இயற்றியவர். மேலும் பெண்கள் ஒரு போதும் யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது, பெண்ணடிமைத்தன்மையை முற்றிலும் ஒழிய வேண்டும் என்று ”மங்கையாராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்று பெண்மையை பார் போற்ற செய்தவர் கவிமணி ஆவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அவ்கள் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, துணைத்தலைவர் சுப்பிரமணியபிள்ளை, வருவாய் ஆய்வாளர் பிரேமகீதா, கிராம நிர்வாக அலுவலர் செல்வி.வளர்மதி, பேரூராட்சி உறுப்பினர்கள் காசி, தாணுமாலையபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை: செப்.6ல் ஆட்கள் தேர்வு!
புதன் 3, செப்டம்பர் 2025 12:22:36 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
