» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புவிசார் குறியீடு பெற்ற மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
சனி 26, ஜூலை 2025 4:43:27 PM (IST)

புவிசார் குறியீடு பெற்ற மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு புவிசார் குறியீடு பெற்ற தோவாளை மாணிக்கமாலை தொடுத்தல் சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா இன்று துவக்கி வைத்தார்
பின்னர் அவர், தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயார் செய்யப்படும் மாணிக்கமாலையானது புவிசார் குறியீடு (Geographical Index) பெற்றுள்ளது, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில், சுசிந்தரம் தாணுமாலையான் கோவில் மற்றும் பல சிறப்பு மிக்க கோவில்களிலும், திருமணம், வரவேற்பு, போன்றவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தோவாளையில் பெரிய அளவில் நடைபெற்று வரும் மலர் சந்தைக்கு வரும் பூக்களால், பூ கட்டுதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது மாவட்ட திறன் மேம்பாட்டு கழகத்தின், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், மாணிக்கமாலை தொடுத்தல் பயிற்சியானது மாற்றுத்திறனாளிகள்/ மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை பெண்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் ஆகிய 30 நபர்கள் அடங்கிய குழுவிற்கு மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா, தெரிவித்தார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், திறன் மேம்பாட்டு பயிற்சி உதவி இயக்குநர் லெட்சுமி காந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், உதவி திட்ட இயக்குநர் வளர்மதி, முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், முன்னாள் தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை: செப்.6ல் ஆட்கள் தேர்வு!
புதன் 3, செப்டம்பர் 2025 12:22:36 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
