» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு இணைய வழி ஏல அறிவிப்பு!
சனி 26, ஜூலை 2025 12:19:47 PM (IST)
சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற இணைய வழி ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளியை ஆக.7ம் தேதி மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, குளச்சல் (இ) தேங்காய்பட்டணம் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிற்றார் நீர்த்தேக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடும் பொருட்டு இணைய வழி ஏல அறிவிப்பானது (e-tender) சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அவர்களால் கடந்த 24.07.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிற்றார் நீர்த்தேக்கத்தின் மீன்பாசி ஏலம் தொடர்பான ஏல அறிவிப்பு, ஏல நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். மேலும் இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் 19494/F3/2024/13 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை 07.08.2025 அன்று மாலை 5.00 மணிவரை சமர்ப்பிக்கலாம். மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும், அல்லது கீழ்குளம், முக்கட்டுவிளையில் அமைந்துள்ள தேங்காய்பட்டணம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
எனவே, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அமைந்துள்ள சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை: செப்.6ல் ஆட்கள் தேர்வு!
புதன் 3, செப்டம்பர் 2025 12:22:36 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
