» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல்!

புதன் 4, ஜூன் 2025 4:34:37 PM (IST)



குழித்துறை தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் தவறி விழுந்த "இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த பீட்டர் ஜான்சன் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் தவறி விழுந்த "இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த பீட்டர் ஜான்சன் அவர்களின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (04.06.2025) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகராட்சிக்குட்பட்ட தபால் நிலையம் அருகில் வசித்து வந்தவர் பீட்டர் ஜான்சன் என்பவர் தினமும் குழித்துறை தடுப்பணையில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

கடந்த 01.06.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியிலிருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (12) ஆகிய இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட பீட்டர் ஜான்சன் இரண்டு மாணவர்களின் உயிரையும் காப்பாற்றிய நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்துள்ள பீட்டர் ஜான்சன் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவி உடனடியாக அன்னாரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory