» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சிவப்பு சாத்தி நடராஜப் பெருமான் ரத வீதி உலா!

புதன் 7, மே 2025 10:00:10 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் 7ஆம் நாளான இன்று மாலை நடராஜப் பெருமான் சிவப்பு சாத்தி பித்தளை சப்பரத்தில் ரதவீதி உலா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மே 1ஆம் தேதி காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவின் 7ஆம் நாளான இன்று காலை 7.35 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமான் உருகு சட்ட சேவை, 8.00 மணிக்கு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் ரத வீதி உலா நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமான் கும்பாபிஷேகம், 10.30மணிக்கு  நடராஜப் பெருமான் மாடவீதி சுற்றி தெப்பக்குளம் அருள்மிகு சுந்தரபாண்டிய விநாயகர் கோயில் விழா மண்டபத்திற்கு எழுந்தருளினார். 

இரவு 7.00 மணிக்கு சிகப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளினர். பின்னர் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தங்கப் பல்லக்கில் அருள்மிகு சோமாஸ்கந்தர் - பாகம்பிரியாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 


மக்கள் கருத்து

Rajaமே 8, 2025 - 03:27:51 PM | Posted IP 104.2*****

namasivay

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory