» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஸ்டார் விளையாட்டு மையம்: தற்காப்பு கலை பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 12, ஏப்ரல் 2025 12:12:44 PM (IST)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குமரி மாவட்டத்தில் தற்காப்பு கலை பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில்" தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி வீரர் வீராங்கனைகளை தேசிய (ம) சர்வதேச அளவில் அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திடும் நோக்கத்தோடு விளையாட்டு வீரர்களின் பின்புலம் தனித்திறன்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு சமவாய்ப்பினை வழங்கி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும் ஒரு சீரான விளையாட்டு மேம்பாட்டு அணுகுமுறையை வழங்குவதை செயல்படுத்தும் விதமாக இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின்கீழ் தற்காப்பு கலையானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இவ்விளையாட்டு பயிற்சி மையத்திற்கு தற்காப்பு கலை பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் 11/04/2025 முதல் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும் .பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20/04/2025 மாலை 5.00 மணி ஆகும் . விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு (ம) உடற்தகுதித் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெறும் நாள் 25/04/2025 ஆகும். நேர்முகத்தேர்வு அன்று உரிய அசல் (ம) நகல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
இது நிரந்தரப்பணி அல்ல, முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப்பணியோ கோர இயலாது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், அண்ணா விளையாட்டரங்கம், நாகர்கோவில் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703507 / 04652 262060 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)

குமரி குகநாதீஸ்வரர் கோவிலில் சிவலிங்க வடிவத்தில் 1008 சங்காபிஷேகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:55:21 AM (IST)

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)
