» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கவிமணி மணிமண்டபம் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: இணை இயக்குநர் தகவல்!
திங்கள் 7, அக்டோபர் 2024 4:05:58 PM (IST)

தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபத்திற்கான பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நினைவகங்கள் இணை இயக்குநர் கு.தமிழ் செல்வராஜன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் மணிமண்டபத்தினை செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் கிராமத்தில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலெட்சுமி இணையருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள் மகனாக பிறந்தார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
கவிமணி சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் குழந்தை பாடல்கள் எழுதியவர். அன்னாருடைய இலக்கிய பணிகளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களுக்கு முழுதிருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க ரூ.92 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 16.06.2020 அன்று பணிகள் துவங்கப்பட்டது.
தற்போது சில காரணங்களால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கூடுதலாக நிதி ஒதுக்கீடு பெற்று, உடனடியாக பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா, தோவாளை ஊராட்சிமன்ற தலைவர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புதிய பெட்டிகளுடன் முதல் பயணத்தை துவங்கியது
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:03:13 PM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)


.gif)