» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் தப்பியோடிய கைதி கைது: கழிவறையில் வழுக்கி விழுந்து காயம்!!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 10:02:56 AM (IST)
தூத்துக்குடியில் போலீசார் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பியோடிய கைதியை தனிப்படை போலீசார் கோயம்புத்தூரில் கைது செய்தனர்.

இந்நிலையில் இவரை கடந்த மார்ச் 5ஆம் தேதி விசாரணைக்காக விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது போலீசார் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்றாராம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், மதுரையில் சிறுவனை ஆட்டோவில் கடத்தி ரூ. 2 கோடி கேட்ட வழக்கிலும் இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து ஹைகோர்ட் மகாராஜாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவர் கோயம்புத்தூரில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் சென்று ஹைகோர்ட் மகாராஜாவை நேற்று முன்தினம் கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். காவல்துறையினர் விசாரணையின் போது கழிவறையில் வழுக்கி விழுந்து இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மஹாராஜா மீது கொலை முயற்சி, குழந்தை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

கன்னியாகுமரியில் மும்பை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
செவ்வாய் 18, மார்ச் 2025 11:49:32 AM (IST)

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:35:02 AM (IST)

நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)

KumarAug 1, 2024 - 11:26:53 AM | Posted IP 162.1*****