» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி: நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது பரிதாபம்
வெள்ளி 29, மார்ச் 2024 8:26:38 AM (IST)
திற்பரப்பில் நண்பர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி தென்காசியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சமுத்திர பாண்டியன். திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய ஒரே மகன் அய்யப்பன் (17). தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதையொட்டி அய்யப்பனும், நண்பர்களும் சுற்றுலா செல்ல தீர்மானித்தனர். அதன்படி ஒரே வகுப்பில் படித்த 18 மாணவர்கள் நேற்று முன்தினம் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு இரவு கன்னியாகுமரியில் தங்கினர். பின்னர் நேற்று அங்கிருந்து புறப்பட்டு திற்பரப்பு அருவிக்கு வந்தனர்.
அருவியில் தற்போது குறைவான அளவு தண்ணீரே பாய்கிறது. ஆனால், அருவியின் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நண்பர்கள் அனைவரும் குளிப்பதற்காக நீச்சல் குளத்தில் இறங்கினர். அவர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தபோது திடீரென அய்யப்பனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தண்ணீரில் தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டனர்.
உடனே அவரை மீட்டு களியல் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்ைச அளித்து விட்டு மேல்சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சக மாணவர்கள் கதறி அழுதனர். சுற்றுலா வந்த இடத்தில் பிளஸ்-2 மாணவர் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவர் கைது!
புதன் 19, நவம்பர் 2025 8:36:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)

குமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது: பாதுகாப்புக்காக கடலில் மிதவைகள் அமைப்பு
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:51:15 PM (IST)

கடலில் படகு இரண்டாக உடைந்து விபத்து: மீனவர் தப்பினார் - மற்றொருவர் மாயம்!
திங்கள் 17, நவம்பர் 2025 4:25:54 PM (IST)

குமரி மாவட்டத்தில் இதுவரை 2,64,716 எஸ்ஐஆர் படிவங்கள் பதிவு: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, நவம்பர் 2025 12:23:04 PM (IST)

ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை எட்டி உதைத்த போதை ஆசாமி கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:47:52 AM (IST)


.gif)
அதுMar 29, 2024 - 08:34:57 PM | Posted IP 172.7*****