» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்; ஈரானிடம் கடற்படையே இல்லை - டிரம்ப் ஆவேசம்!
புதன் 13, மே 2026 11:43:59 AM (IST)
மேற்காசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்பவர்களை "தேசத்துரோகிகள்" மற்றும் "முட்டாள்கள்" என அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஈரான் ராணுவம் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுத்து வருவதாக வெளியாகும் செய்திகளை மறுத்துள்ள டிரம்ப், ஈரானின் ராணுவ பலம் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்: "ஈரான் கடற்படையிடம் இருந்த 159 கப்பல்களும் தற்போது கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கப்பட்டு விட்டன. அவர்களிடம் இப்போது சொல்லிக்கொள்ளும்படி கடற்படையே இல்லை.ஈரானின் விமானப்படை முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் அதிநவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டன. அந்த நாட்டுத் தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை," என அதிரடியான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து உள்நாட்டில் எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர் "தோல்வியாளர்கள், நன்றியற்றவர்கள் மற்றும் முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும். நம் நாட்டு ராணுவம் குறித்துப் போலிச் செய்திகளைப் பரப்புவது தேசத்துரோகச் செயல். இவர்கள் மறைமுகமாக ஈரானுக்கு உதவி செய்கிறார்கள்," எனச் சாடியுள்ளார்.
ஈரான் தற்போது ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவைச் சந்தித்து வருவதாகவும், அமெரிக்காவிற்கு எதிராகச் செயல்படும் அந்நாட்டுக்கு இனி எவ்வித எதிர்காலமும் இல்லை என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் பதிலடியை அமெரிக்கா ஒருபோதும் ஏற்காது என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடி அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் மேலும் தீவிரமடைவதையே காட்டுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 11, ஜூலை 2026 12:21:14 PM (IST)

நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி: 40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:54:38 PM (IST)

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா!
வியாழன் 9, ஜூலை 2026 4:44:33 PM (IST)

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் - இந்தியா கவலை!
வியாழன் 9, ஜூலை 2026 10:33:33 AM (IST)

ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது: நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:59:06 PM (IST)


