» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது

வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)



மெக்சிகோ நாட்டில் பொது இடத்தில் வைத்து,  பெண் அதிபருக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபருக்கு கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றார். அவர் மெக்சிகோ சிட்டி நகரில் நடந்து குறைந்த அளவிலான பாதுகாவலர்களுடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர்களுடன் புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுத்தார். அப்போது அவரை நெருங்கிய வாலிபர் ஒருவர் உடன் இணைந்து போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அவருடைய தோள்பட்டை மேல் கையை போட்டதும் இன்றி சட்டென தகாத முறையில் தொட்டு முத்தமிட முயன்றார்.

சுதாரித்து கொண்ட கிளாடியா அந்த வாலிபரிடம் இருந்து உடனடியாக விலகினார். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மெக்சிகோவில் பெண் அதிபருக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory