» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி

சனி 7, ஜூன் 2025 12:41:14 PM (IST)



பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று இந்திய குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. 

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவிக்க அமெரிக்காவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. அமெரிக்காவின் நாடாளுமன்ற குழுவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தபின், அமெரிக்க வெளியுறவு துணைச் செயலாளர், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் அமெரிக்காவும் உறுதியாக நிற்கிறது.

எல்லைதாண்டிய பயங்கரவாதம், எந்த வடிவில் இருந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்று தனது உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துரைத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தோம் என்று தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அழித்தது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் எம்.பி.க்கள் அடங்கிய குழுக்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory