» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசியாவில் கல் குவாரி விபத்தில் 19 பேர் பலி: 4வது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது!

திங்கள் 2, ஜூன் 2025 4:40:32 PM (IST)



இந்தோனேசியாவில் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். 

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கல் குவாரியில் பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் குவாரியில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் 6 பேரை பத்திரமாக மீட்டனர்.

ஆனாலும், இந்த விபத்தில் ஏற்கனவே 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, குவாரி விபத்தில் மேலும் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அந்த தொழிலாளர்களை மீட்க இன்று 4வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடந்து 4 நாட்கள் ஆகும் நிலையில் அந்த 6 தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory