» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்பு இல்லை : பாகிஸ்தான் அமைச்சர் சொல்கிறார்
புதன் 23, ஏப்ரல் 2025 11:41:14 AM (IST)
"பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை" என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் இது இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று தெரிவித்துள்ளது.

இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், "பாகிஸ்தானுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. இது அனைத்தும் அவர்களின் (இந்தியாவின்) உள்நாட்டில் உருவான பிரச்சனை. இந்திய மாநிலங்களில் அந்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் உருவாகி உள்ளன.
ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கான கிளர்ச்சிகள். நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்நாட்டின் எல்லா இடங்களிலும் இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்: ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 12:14:10 PM (IST)

லிபியாவில் 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக குடியமர்த்த டிரம்ப் திட்டம்
சனி 17, மே 2025 11:57:22 AM (IST)

வங்கி கடன் மோசடி வழக்கில் பிரிட்டனில் கைது: நீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி
வெள்ளி 16, மே 2025 12:47:48 PM (IST)

பாக். விமான தளங்களை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி: போர் நிபுணர்
வியாழன் 15, மே 2025 5:36:04 PM (IST)

போர்களை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம்: புதிய போப் லியோ அறிவிப்பு!
புதன் 14, மே 2025 5:54:45 PM (IST)

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு !
செவ்வாய் 13, மே 2025 11:47:43 AM (IST)
