» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஷேக் ஹசீனா விவகாரத்தில் இந்தியாவிற்கு 2 முறை கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை: வங்கதேசம்
வியாழன் 6, மார்ச் 2025 4:25:50 PM (IST)
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரிய விவகாரத்தில் இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை என்று இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் கூறினார்.

ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு வென்றவருமான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகமது யூனுஸ் அளித்த பேட்டியில்,''ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவர் மட்டுமல்ல, அவருடன் தொடர்புடைய நபர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் விசாரணை செய்யப்படுவார்கள்.
வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு எதிராக 2 முறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை நாடு கடத்த கோரி இந்தியாவிற்கு 2 முறை கடிதங்கள் அனுப்பி உள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதிலும் கிடைக்கவில்லை. வங்கதேச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்றாலும் அவர் வழக்கை சந்திக்க நேரிடும்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருது: பிரதமர் நவின் ராமகூலம் அறிவிப்பு
புதன் 12, மார்ச் 2025 12:32:40 PM (IST)

பாகிஸ்தான் ரயில் கடத்தல் : 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: 104 பிணைக் கைதிகள் மீட்பு
புதன் 12, மார்ச் 2025 12:17:21 PM (IST)

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம்: ரஷிய அதிபரும் ஒப்புக்கொள்வார் - டிரம்ப் நம்பிக்கை!
புதன் 12, மார்ச் 2025 10:32:30 AM (IST)

எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல் பின்னணியில் உக்ரைன் : எலான் மஸ்க் குற்றச்சாட்டு!
செவ்வாய் 11, மார்ச் 2025 12:16:46 PM (IST)

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு : அமெரிக்க வரி விதிப்புக்கு பணிய மாட்டோம் என பேச்சு
திங்கள் 10, மார்ச் 2025 10:39:44 AM (IST)

கடுமையான வரி, பொருளாதார தடை விதிக்கப்படும் : ரஷியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
சனி 8, மார்ச் 2025 12:52:27 PM (IST)
