» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்பட பல பகுதிகளில் ரஷியா தாக்குதல்: 36 பேர் பலி
செவ்வாய் 9, ஜூலை 2024 12:28:21 PM (IST)

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 865 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், 171 பேர் படுகாயமடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிந்து நதிநீர் உரிமைகளைப் பறிப்பவர்கள் கைகள் வெட்டப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்கள் மிரட்டல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:52:09 AM (IST)

சீஷெல்ஸ் நவசக்தி விநாயகர் கோயிலில் மோடி வழிபாடு: உலக அமைதிக்காகப் பிரார்த்தனை!
திங்கள் 29, ஜூன் 2026 3:45:56 PM (IST)

வெனிசுலாவில் வரலாறு காணாத இரட்டை நிலநடுக்கம்: 164 பேர் பலி, நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்!
வெள்ளி 26, ஜூன் 2026 8:52:06 AM (IST)

கமேனியின் இறுதிச் சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு!
புதன் 24, ஜூன் 2026 4:29:35 PM (IST)

இந்திய வங்கிக்கு வட்டியுடன் ரூ.100 கோடி செலுத்த நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 11:57:40 AM (IST)

கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:42:28 PM (IST)


