» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:58:31 PM (IST)
வங்கிக் கணக்கின் 'கேஒய்சி' (KYC) விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் எனக் கூறி வரும் குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்களை நம்ப வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"KYC புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் அல்லது வங்கி சேவை நிறுத்தப்படும்" எனக் கூறி வாடிக்கையாளர்களை அச்சமடையச் செய்து பதற்றத்தில் அவசர முடிவெடுக்க வைக்கின்றனர். குறுஞ்செய்தியில் அனுப்பப்படும் சந்தேகத்திற்குரிய இணைய இணைப்பை (Link) கிளிக் செய்ய வைத்து, போலி இணையதளங்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்கு விவரங்களைத் திருடுகின்றனர்.
ஆர்பிஐ வழங்கும் 3 முக்கிய விதிகள்: "நில், யோசி, செயல்படு"
நில் (பதற்றமடையாதீர்): சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தி வந்தவுடன் பதற்றமடைந்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்.
யோசி (உண்மைத் தன்மை): வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் KYC புதுப்பிப்புக்காகச் சந்தேகத்திற்குரிய லிங்குகளைச் குறுஞ்செய்தியில் அனுப்புவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
செயல்படு (அதிகாரப்பூர்வ வழி): தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யக் கூடாது. சந்தேகம் இருப்பின், வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்புகொண்டு சரிபார்க்கவும்.
பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:
ரகசியத் தகவல்கள்: OTP, வங்கி PIN எண், Password போன்ற ரகசியத் தகவல்களை யாருடனும் பகிரக் கூடாது.
வங்கி அதிகாரிகள்: வங்கி அலுவலர் எனக்கூறி தொலைபேசியில் கேட்டாலும் இத்தகவல்களைத் தரக்கூடாது.
போலி செயலிகள்: அடையாளம் தெரியாத செயலிகள் அல்லது இணையதளங்களில் தனிப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டாம்.
பணத்தை இழந்தால் என்ன செய்ய வேண்டும்?
இணையவழி மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண்ணைத் (Cyber Crime Helpline Number) தொடர்புகொள்ளலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் விரைந்து புகார் அளிக்கலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு அதிரடி செக் : 2-வது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% கட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:41:44 PM (IST)

எங்களது உள்விவகாரத்தில் தமிழக தலைவர்கள் தலையிடக் கூடாது! — கர்நாடக அமைச்சர்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:14:32 PM (IST)

காவிரி வழக்கு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:38:13 AM (IST)


