» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எங்களது உள்விவகாரத்தில் தமிழக தலைவர்கள் தலையிடக் கூடாது! — கர்நாடக அமைச்சர்

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:14:32 PM (IST)

RamalingaReddy.jpg

வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் கர்நாடகாவில் வாழும் கன்னடர்களே; எங்களது உள்விவகாரத்தில் மற்ற மாநிலத்தவர் தலையிடக் கூடாது" என்று கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் பல பத்தாண்டுகளாகக் கர்நாடகாவிலேயே வசித்து வந்தவர்கள். அவர்கள் தமிழர்களாகவோ அல்லது வேறு சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம்; ஆனால், அவர்கள் அனைவரும் எங்கள் கன்னடர்களே."

இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் தொடர்புடைய உள்விவகாரம். இதில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டும்? உதாரணத்திற்குத் தேர்தலின் போது விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள். சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 21 அல்லது 22-ஆம் தேதிகளில் விசாரணை அறிக்கை வெளியாகும். எங்களது துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."

முதல்வர் டி.கே. சிவகுமார் கருத்து:

இதே விவகாரம் குறித்துப் பேசிய முதல்வர் டி.கே. சிவகுமார், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தினார். நமது மாநிலத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது அவசியம் என்பதால், அவர்கள் தங்களது பணியைப் பார்க்கட்டும்; நாம் நமது பணியைப் பார்ப்போம்."

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மானை வேட்டையாடியதாகக் கூறி, கர்நாடகாவில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவத்தைக் கண்டித்து வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்ட நிலையில், உயிரிழந்த 3 தமிழர்களின் உடல்களும் நேற்று அவர்களின் சொந்தக் கிராமங்களில் அடக்கம் செய்யப்பட்டன. இச்சம்பவத்திற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory