» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரேஷன் கடைகளில் இனி உயர்தர அரிசி: குருணை அளவை குறைக்க மத்திய அரசு ஒப்புதல்!

வெள்ளி 10, ஜூலை 2026 8:31:55 AM (IST)

RiceGoverment.jpg

நாடெங்கிலும் உள்ள பொது விநியோகத் திட்ட ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அதில் கலந்திருக்கும் குருணையின் அளவைக் கணிசமாகக் குறைப்பதற்கான புதிய நடைமுறையை மத்திய அரசு ஒப்புதலுடன் அமலுக்குக் கொண்டு வருகிறது.

இந்திய உணவுக்கழகத்தின் (FCI) மத்திய சேமிப்புக் கிடங்குகளில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 122.64 மில்லியன் டன் உணவுத்தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இமபெரும் கையிருப்பில் கோதுமை, சிறுதானியங்கள், நெல், அரிசி ஆகியவை அடங்கும். இங்கிருந்து அரிசி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ரேஷன் அரிசியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், உடைந்த அரிசியின் அளவைக் குறைக்க மத்திய அரசு புதிய முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக ‘ஆர்.எம்.டி' (RMT) என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது.

மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி அரிசி ரகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

பச்சரிசி: இதுவரை 25 சதவீதமாக அனுமதிக்கப்பட்டிருந்த குருணை அளவு, புதிய விதிமுறைப்படி 10 சதவீதமாகக் குறைக்கப்படும்.

புழுங்கல் அரிசி: இதுவரை 16 சதவீதமாக இருந்த குருணை அளவு, புதிய விதிமுறைப்படி 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.

ஆந்திரா பரிசோதனை வெற்றி!

முன்னதாக இத்திட்டம் ஆந்திர மாநிலத்தில் சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள அரிசி ஆலைகளில் நெல் அரைக்கும்போது கிடைக்கும் உடைந்த அரிசியை (குருணை) ஆலைகளிடமே ஒப்படைக்கச் செய்து, அதற்குப் பதிலாக ஆலைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆந்திராவில் இந்த நடைமுறை முழு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தரமான அரிசியை வழங்கும் நோக்கில் இப்புதிய திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory