» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி முன்னிலையில் அமைச்சரவை பதவியேற்பு!

செவ்வாய் 12, மே 2026 5:41:53 PM (IST)



அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டமன்றத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 101 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் பாஜக: 81 இடங்கள், போடோலாந்து மக்கள் முன்னணி  10 இடங்களை கைப்பற்றியது

இந்த வெற்றியின் மூலம் அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. குவாஹாட்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்குப் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 4 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்:

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அசாம் மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாகப் பதவியேற்பிற்குப் பின் ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதி அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory