» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாக்பூர் வெடிபொருள் தொழிற்சாலையில் கோர விபத்து; 17 பேர் உடல் சிதறி பலி!
திங்கள் 2, மார்ச் 2026 11:34:33 AM (IST)

நாக்பூர் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம், கடோல் தாலுகாவிற்கு உட்பட்ட ரவுல்கான் பகுதியில் இயங்கி வரும் 'எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட்' தொழிற்சாலையில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுரங்கங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் இந்த ஆலையில், இன்று காலை சுமார் 7:00 மணி முதல் 7:15 மணிக்குள் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 'டெட்டனேட்டர் பேக்கிங்' (Detonator Packing) பிரிவில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படுகாயமடைந்த 18 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு நாக்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து ஆலை அதிகாரி கூறுகையில்: "காலை ஷிப்ட் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் விபத்து நிகழ்ந்தது. காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்றார்.
தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படையினரும் (SDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் விபின் இதங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஹர்ஷ் போடார் ஆகியோர் விபத்து நடந்த இடத்தைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து ஆலை அதிகாரி கூறுகையில்: "காலை ஷிப்ட் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் விபத்து நிகழ்ந்தது. காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்றார்.
தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படையினரும் (SDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் விபின் இதங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஹர்ஷ் போடார் ஆகியோர் விபத்து நடந்த இடத்தைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும்: நெதன்யாகுவுடன் மோடி அவசர ஆலோசனை
திங்கள் 2, மார்ச் 2026 5:55:10 PM (IST)

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!
ஞாயிறு 1, மார்ச் 2026 11:55:03 AM (IST)

பேய் ஓட்டுவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கோவில் பூசாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஞாயிறு 1, மார்ச் 2026 11:09:07 AM (IST)

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 18 பேர் உடல் கருகி பலி: முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்!
சனி 28, பிப்ரவரி 2026 5:00:11 PM (IST)

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கேஜ்ரிவால், சிசோடியா விடுவிப்பு : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:39:03 PM (IST)

ஜப்பானின் பெயரை மாற்ற யோகி சென்றிருக்கிறார்: அகிலேஷ் யாதவ் கிண்டல்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:35:28 PM (IST)

