» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 29, ஜனவரி 2026 5:23:49 PM (IST)

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் ஜன. 30 வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க மேலும் அவகாசம் வழங்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதாவது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ள வாக்காளர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களின் பெயர்களை, அந்தந்த கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகர்ப்புற வார்டு அலுவலகங்களில் பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அதில் ஆட்சேபனை உள்ளவர்கள் தங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க 10 நாள்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல வாக்காளர் பட்டியல் பணிக்கு தேவையான அலுவலர்களை வழங்க வேண்டும் என மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பூத் ஏஜெண்டுகள் மூலமாக விண்ணப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 16 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் ஜன. 30 வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க மேலும் அவகாசம் வழங்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதாவது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ள வாக்காளர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களின் பெயர்களை, அந்தந்த கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகர்ப்புற வார்டு அலுவலகங்களில் பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அதில் ஆட்சேபனை உள்ளவர்கள் தங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க 10 நாள்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல வாக்காளர் பட்டியல் பணிக்கு தேவையான அலுவலர்களை வழங்க வேண்டும் என மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பூத் ஏஜெண்டுகள் மூலமாக விண்ணப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 16 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பு!
சனி 31, ஜனவரி 2026 5:32:04 PM (IST)

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது
சனி 31, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஐ.டி ரெய்டின் போது பயங்கரம்!
சனி 31, ஜனவரி 2026 11:44:42 AM (IST)

பள்ளிகளில் இலவச நாப்கின் கிடைக்க மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்: மீறினால் பள்ளி அங்கீகாரம் ரத்து!
சனி 31, ஜனவரி 2026 10:37:36 AM (IST)

பெண் கமாண்டோ படுகொலை : வரதட்சணை விவகாரத்தில் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 30, ஜனவரி 2026 4:56:57 PM (IST)

யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
வெள்ளி 30, ஜனவரி 2026 10:30:01 AM (IST)

