» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு
புதன் 16, ஜூலை 2025 5:18:58 PM (IST)

பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானியின் துரித நடவடிக்கையால் விமானத்தில் இருந்த 173 பயணிகளும் நூழிலையில் உயிர் தப்பினர்.
தலைநகர் டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு நேற்றிரவு இண்டிகோ விமானம் 6E 2482, 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலையத்தின் ரன்வேயில் ஓடுபாதையில் தரையிறங்கும் இடத்துக்கு முன்பே விமானம் தரையிறங்கியுள்ளது. மீதமுள்ள ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை மீண்டும் டேக் ஆப் செய்தனர்.
பின்னர், விமானம் மூன்று முறை வானில் வட்டமிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது. இதனால், விமானத்தில் இருந்த 173 பயணிகளும் நூழிலையில் உயிர் தப்பினர். விமானிகளின் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சமயோசித முடிவு, விமானம் விபத்திலிருந்து தப்புவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, பாட்னா விமான நிலையத்தின் ஓடுபாதை பிற விமானங்களின் ஓடுபாதையுடன் ஒப்பிடும் போது குறுகிய தூரமுடையது என்பது கவனிக்கத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடுகளில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஐடி ஊழியர் கைது: தங்க நகைகள், கார் பறிமுதல்!!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:43:30 PM (IST)

ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:30:31 PM (IST)

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு தயார்: முதல்வருக்கு அஸ்வினி வைஷ்ணவ்பதில்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:07:41 PM (IST)

நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:25:11 AM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்
சனி 7, பிப்ரவரி 2026 5:44:50 PM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கான பாதிப்புகள்: ஜெய்ராம் ரமேஷ் பட்டியல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:59:53 PM (IST)

