» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் : தன்னைத் தானே பெல்ட்டால் அடித்து கொண்ட ஆம் ஆத்மி நிர்வாகி!
செவ்வாய் 7, ஜனவரி 2025 11:28:50 AM (IST)

குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கூறி ஆம் ஆத்மி நிர்வாகி தன்னைத் தானே பெல்டால் அடித்துக் கொண்டார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சவுக்கால் அடித்து கொண்டார். அதே போன்று , குஜராத்தில் சூரத் நகரில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியை சேர்ந்த தேசிய இணை செயலாளரான கோபால் இத்தாலியா என்பவர் திடீரென இடுப்பில் அணிந்து இருந்த பெல்ட்டை கழற்றி தனக்குத்தானே அடித்து கொண்டார்.
அப்போது சுற்றியிருந்தவர்கள் ஓடி சென்று அவரை தடுக்க முயன்றனர். மேடையில் பேசிய அவர், பா.ஜ.க. ஆட்சியை குற்றம் சாட்டினார். பா.ஜ.க. தலைவர் ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்த முயன்றார் என கூறி பெண் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி கூறிய அவர், பா.ஜ.க.வின் ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகளாக உள்ள தலைவர்கள் மற்றும் அதிகாரிகளால் மக்களுக்கு நீதி கிடைப்பது கடினம் என்றாகி விட்டது. பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் நீதி இல்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியபடியே பெல்ட்டால் அவர் அடித்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், குஜராத் பல சம்பவங்களை பார்த்து விட்டது.
மோர்பி பாலம் இடிந்து விழுந்தது, வதோதராவில் படகு விபத்து, பல்வேறு கள்ளச்சாராய சோகங்கள், தீ விபத்துகள் மற்றும் அரசு பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிவு என பல விசயங்கள் நடந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க செய்ய என்னால் முடியவில்லை என பெல்ட்டை கொண்டு அடிப்பதற்கு முன் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குஜராத்தில் பூபேந்திர படேல் அமைச்சரவை பதவியேற்பு: ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:21:52 PM (IST)

தமிழக ஆளுநருக்கு எதிரான மனுக்கள் விசாரணை விசாரணை எப்போது? உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 12:33:12 PM (IST)

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவா? மத்திய அரசு விளக்கம் - ராகுல் விமர்சனம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:37:12 PM (IST)

டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 15, அக்டோபர் 2025 5:05:42 PM (IST)

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம்: பிரதமர் மோடி
புதன் 15, அக்டோபர் 2025 11:05:01 AM (IST)

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)
