» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜனவரி 1 முதல் பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு : காவல்துறை எச்சரிக்கை!

செவ்வாய் 17, டிசம்பர் 2024 11:26:55 AM (IST)

மத்தியப் பிரதேசத்தில் ஜனவரி 1 முதல் பிச்சை போடுபவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்தூர். நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7ஆவது முறையாக முதலிடம் பெற்ற நகரமாக இருக்கிறது இந்தூர். இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக இந்தூரை மாற்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்தூரில் பிச்சை எடுப்பதை தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரசாரம் இந்த மாத இறுதி வரை தொடரும்.

வரும் ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். இந்தூரில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.


மக்கள் கருத்து

அப்போDec 17, 2024 - 12:47:30 PM | Posted IP 172.7*****

கோயில் உண்டியலை காசு போடவா வேண்டாமா?

மக்கள்Dec 17, 2024 - 12:46:37 PM | Posted IP 172.7*****

என்ன கொடுமை சார் இது? பிச்சைக்காரர்களை தான் தூக்கி உள்ளே போடணும், அப்பாவி மக்களையா எப்.ஐ.ஆர் பதிவு செய்வார்களா ? யாரு அந்த அரை குறை முட்டாள்??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory