» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இலங்கை அதிபர் திசநாயகா இந்தியா வருகை : மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு

ஞாயிறு 15, டிசம்பர் 2024 9:06:28 PM (IST)



இலங்கை வருகை தந்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகாவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து அந்த நாட்டின் அதிபராக அவர் பதவியேற்று கொண்டார். இந்தநிலையில் இலங்கை அதிபர் திசநாயகா 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். 

டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் திசநாயகாவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கை அதிபராக திசநாயகா பதவியேற்றதை தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இலங்கை அதிபர் திசநாயகா நாளை பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது அவர் இருநாடுகளிடையே நிலவும் மீனவ பிரச்சினை, எதிர்க்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory