» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருந்தால் நடவடிக்கையா? மத்திய அரசு விளக்கம்

செவ்வாய் 10, டிசம்பர் 2024 4:23:41 PM (IST)

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பண பரிவர்த்தனைகள், மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கு வங்கி கணக்கு அத்தியாவசியமானமாக உள்ளது. இந்த சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என, சமூக வலைத்தளங்களில் வைரலான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் உலா வந்த இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது போலியான தகவல் என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory