» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!
புதன் 30, அக்டோபர் 2024 12:55:07 PM (IST)
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். அவர் பயங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பல்வேறு முன்னணி விமான சேவை நிறுவனங்களை சேர்ந்த 400-க்கும் அதிகமான விமானங்களுக்கு கடந்த 15 நாட்களில் சமூகவலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்தநிலையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மராட்டிய மாநிலத்தில் உள்ள கோண்டியாவை சேர்ந்த ஜக்தீஷ் உய்கே (35) என்பது தெரியவந்தது.
இவர் விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி பிரதமர் அலுவலகம், ரெயில்வே மந்திரி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அலுவலகம் மிரட்டல் இ-மெயில் அனுப்பி உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஜக்தீஷ் உய்கே பயங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாகவும், 2021-ம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்து உள்ளது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில் தலைமறைவாக இருந்த ஜக்தீஷ் உய்கேயை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
