» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரேபரேலியா? வயநாடா? எம்.பி.,யாக நீடிப்பதில் குழப்பம் உள்ளது - ராகுல் காந்தி கருத்து

புதன் 12, ஜூன் 2024 5:49:24 PM (IST)

"வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில், எதில் எம்.பி.,யாக நீடிக்க வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது" என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் உ.பி., மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது. நேற்று (ஜூன் 11) ரேபரேலி சென்ற ராகுல் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இன்று கேரள வந்த ராகுல், மலப்புரம் பகுதியில் நடந்த பேரணியில் பங்கேற்றார். 

தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு வரலாறும் பாரம்பரியமும் நமது அரசியல் சாசனத்தை பாதுகாக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும் என்பது குறித்தும், இந்திய மக்களுக்கும் பிரதமர் உத்தரவிட முடியாது என்பதை கேரளா, உ.பி., உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் எடுத்து காட்டி உள்ளன.அரசியல்சாசனம் எங்களது குரல். அதனை தொடாதீர்கள் எனவும் பிரதமரிடம் மக்கள் தெரிவித்துள்ளனர். 

தேர்தலுக்கு முன்னர், அரசியல் சாசனத்தை கிழிப்போம் என பா.ஜ., வினர் பிரசாரம் செய்னர். ஆனால் தேர்தலுக்கு பின் அரசியல் சாசனத்தை பிரதமர் வணங்கினார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நூலிலையில் வெற்றி பெற்றார். அங்கு அவர் தோற்கடிக்கப்பட்டு இருப்பார். அயோத்தியில் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், வன்முறை மற்றும் வெறுப்புணர்வை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.

பிறகு வயநாட்டில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. அரசியல் சாசனத்தை பாதுகாக்கவே, 2024 லோக்சபா தேர்தல் நடந்தது. அன்பு மற்றும் பாசத்தால், வெறுப்புணர்வு தோற்கடிக்கப்பட்டது. அடக்கத்தால், ஆணவம் தோற்கடிக்கப்பட்டது. வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில், எதில் எம்.பி.,யாக நீடிக்க வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் இரு தொகுதி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.


மக்கள் கருத்து

ஆனந்த்Jun 13, 2024 - 02:33:26 PM | Posted IP 172.7*****

ரோபரேலி தொகுதிக்கு பிரியங்காகாந்தி பொருத்தமானவர்

நொந்த சாமிJun 13, 2024 - 07:17:28 AM | Posted IP 172.7*****

ரோமாபலி , இத்தாலி 😁😁😁

கந்தசாமிJun 12, 2024 - 07:33:19 PM | Posted IP 162.1*****

ரேபரேலி தொகுதியை ராஜினாமா செய்து விட்டு அங்கு பிரியங்காவை நிற்க வைக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory