» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாமியாரை 95 முறை கத்தியால் குத்திக் கொலை இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!
புதன் 12, ஜூன் 2024 5:34:51 PM (IST)
மத்தியப் பிரதேசத்தில் மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்திக் கொலை செய்த இளம்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான சரோஜ் கோல் என்பவரை, 24 வயது மருமகள் காஞ்சன் 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கடந்த 2022ல் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றபோது மாமியாரும், மருமகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகள் சரமாரியாக மாமியாரை குத்தியுள்ளார். அவர் மகன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து கைது காஞ்சன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரேவா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி காஞ்சனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். சரோஜ் கோலின் கணவர் வால்மிக் கோலும், மருமகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கில் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டார். ஆனால் ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST)

கார்-பஸ் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி: மகா கும்ப மேளாவுக்கு சென்றபோது சோகம்!
சனி 15, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST)

வாரணாசியில் 3வது தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி பெருமிதம்
சனி 15, பிப்ரவரி 2025 4:07:56 PM (IST)

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன் முறையாக ரூ.262 கோடி லாபம் ஈட்டி சாதனை!
சனி 15, பிப்ரவரி 2025 12:15:07 PM (IST)

ஜெயலலிதாவின் நகைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரிய ஜெ.தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:40:04 PM (IST)

இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி அறிமுகம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 3:36:04 PM (IST)
