» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி பரபரப்பு பேட்டி
திங்கள் 10, ஜூன் 2024 12:08:42 PM (IST)
மத்திய அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 18 இடங்களிலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜனதா தலா ஒரு தொகுதியில் வென்றன.திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி, 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலமாக கேரளாவில் தனது முதல் வெற்றிக் கணக்கை பா.ஜனதா தொடங்கியது. சுரேஷ் கோபியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் கே. முரளீதரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கேரளாவின் முதல் பா.ஜனதா எம்.பியான சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபி அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், தனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என இன்று கூறியுள்ளார்.
மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சுரேஷ் கோபி கூறியதாவது:- நான் எம்.பியாகவே பணி செய்ய விரும்புகிறேன். எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றுதான் கூறி வந்தேன். ஆனால் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டேன். எனக்கு அமைச்சர் பதவியில் நாட்டம் இல்லை. எனவே, என்னை பொறுப்பில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறையினர் தொடர் பாலியல் வன்கொடுமை: கையில் எழுதி வைத்து மருத்துவர் தற்கொலை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:07:52 PM (IST)

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)

ஆந்திராவில் பஸ் தீவிபத்தில் 20பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:39:54 AM (IST)

பீகார் சட்ட சபை தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:24:12 PM (IST)

திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

கொலை, ஆயுதக் கடத்தல் வழக்குகளில் தேடப்பட்ட 4 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:42:12 PM (IST)


.gif)