» சினிமா » செய்திகள்

வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்

வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)



வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகள் துவங்கி விட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல். படத்தை கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. 

இது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறும் போது, படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்து வந்தார். இந்நிலையில், வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், வாடிவாசல் பாடல் இசையமைக்கும் பணிகள் தொடங்கின என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் வி கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் சூர்யாவை டேக் செய்துள்ளார். மேலும், இயக்குநர் வெற்றி மாறனுடன் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருப்பதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory