» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மட்டும் கேப்டனாக விளையாடி வந்தார். ஆனால், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி இழந்தது. இந்தத் தொடர்களில் ரோகித் ஷர்மாவின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே, அடுத்த மாதம் நடக்கும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். அதில், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவிப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:17:13 PM (IST)

பிக்பாஷ் தொடரில் பங்கேற்க அஸ்வினுக்கு ஆஸி.கிரிக்கெட் சிஇஓ அழைப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 11:12:40 AM (IST)

ஆசிய கோப்பை டி.20 தொடர்: இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் பயணம்
புதன் 3, செப்டம்பர் 2025 5:37:17 PM (IST)

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)
