» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:46:24 AM (IST)
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
வருகிற 27ஆம் தேதி பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூரில் உள்ள திருக்கோவில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகளவு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை போன்ற முக்கிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு 25.08.2026, 26.08.2026 27.08.2026 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே, திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூரில் உள்ள திருக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் இச்சிறப்பு பேருந்து இயக்கங்களை முழுமையாக பயன்படுத்தி, தங்களின் பயணத்தினை இனியதாக்கிக்கொள்ள தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)

தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; ஆளுநர் ஒப்புதல்
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:41:25 PM (IST)

ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் 16 பேர் மீது புகார்; 6 பேர் மட்டுமே சேர்ப்பு: தாயார் ஆனந்தி ஆதங்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:41:02 AM (IST)

கொளத்தூரில் த.வெ.க. வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:02:57 PM (IST)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)


