» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

சட்டமன்றப் பேரவையில் "லாட்டரி நிறுவனத்திடம் திமுக ரூ.900 கோடி வாங்கியது ஏன்?" எனத் தமிழக அமைச்சர் ஆதவ் கேள்வி எழுப்பியதும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அளித்த பதிலும் அவையில் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.
சட்டமன்றத்தில் காரசார விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஆதவ் தெரிவித்ததாவது: "போதையில்லாத் தமிழகம் மற்றும் மதுவிலக்கு என்பதே எங்களது முதன்மைக் கொள்கை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சரி, வந்த பின்பும் சரி எங்களது எம்பிக்களோ அல்லது அமைச்சர்களோ எந்தச் சாராய ஆலையையும் நடத்தவில்லை.
ஆனால், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கட்சியின் பொருளாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆகியோர் சாராய ஆலைகளை நடத்தி, டாஸ்மாக் மூலமாக ஆர்டர்களைப் பெற்று ஆதாயம் அடைகிறார்களா இல்லையா?" என வினவினார். அமைச்சர் ஆதவின் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், "எங்களைப் பார்த்து லாட்டரி தொழில் குறித்துப் பேசுகிறார்கள். லாட்டரி நிறுவனத்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.900 கோடி நிதி வாங்கியது ஏன்? தைரியம் இருந்தால் இதற்குப் பதில் சொல்லுங்கள். நான் எந்தத் தொழிலோ, நிறுவனமோ நடத்தவில்லை" எனக் காட்டமாகப் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதில்:
அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: "திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் பணம் வாங்கியது என அமைச்சர் கேட்கிறார். அந்தப் பணத்தைக் கொடுத்ததே அவரது மாமனார் தான்! எதற்காகக் கொடுத்தீர்கள் என்பதை அவரிடமே கேட்டு நீங்கள் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்" எனக் கூறினார்.
உதயநிதியின் பதிலுக்குக் குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ், "பணம் எதற்காக வாங்கப்பட்டது என்பது உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் தான் தெரியும். அதை வீட்டிற்குப் போய் உங்கள் அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்" எனப் பதிலடி கொடுத்தார்.
ஓபிஎஸ் கருத்து
இதற்கிடையே இ விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "தேர்தல் நன்கொடை என்பதை பாரதிய ஜனதா, காங்கிரஸ் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே பெற்றுள்ளன. அதை லஞ்சம் போலப் பேசுவது தவறானது" எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:28:31 AM (IST)

வீடு புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; பள்ளி வேன் டிரைவர் சிறையில் அடைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:19:56 AM (IST)

தூத்துக்குடி தனசேகர் நகரில் டாஸ்மாக் தொல்லை: மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:45:15 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)



உண்மAug 7, 2026 - 10:04:23 PM | Posted IP 172.7*****