» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

தென்மாவட்டப் பயணிகளின் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06135): தாம்பரத்திலிருந்து ஜூலை 30, ஆகஸ்ட் 1, 6, 8, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் (வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்) காலை 5:00 மணிக்குப் புறப்படும் பகல் நேர சிறப்பு ரயில் (06135), அதே நாள் மாலை 3:30 மணிக்குத் தென்காசியைச் சென்றடையும்.

தென்காசி – தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06136): மறுமார்க்கத்தில், தென்காசியிலிருந்து ஜூலை 31, ஆகஸ்ட் 2, 7, 9, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 5:00 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06136), அதே நாள் மாலை 3:15 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

மொத்தம் 23 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதால் பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory