» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டுமா? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!
செவ்வாய் 26, மே 2026 12:46:04 PM (IST)

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், மோசடி செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டுமா? என முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கெனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், மோசடி செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டுமா சி.எம் சார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வானிலை மையம் எச்சரிக்கை எதிரொலி: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?
செவ்வாய் 26, மே 2026 3:38:20 PM (IST)

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விஞ்ஞான ஏமாற்று வேலை: இபிஎஸ் குற்றச்சாட்டு
செவ்வாய் 26, மே 2026 12:35:29 PM (IST)

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா: சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்!
செவ்வாய் 26, மே 2026 12:18:14 PM (IST)

விடுதி தோழிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:12:05 AM (IST)

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ஜூன் 15 முதல் அமலுக்கு வருகிறது!
செவ்வாய் 26, மே 2026 8:59:21 AM (IST)

அமைச்சர்கள் தங்களின் துறை குறித்து அறிந்து பேச வேண்டும்: தூத்துக்குடியில் சரத்குமார் பேட்டி!
செவ்வாய் 26, மே 2026 8:53:39 AM (IST)


