» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பனையூரில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்: தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு!

செவ்வாய் 5, மே 2026 3:40:03 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று தவெக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றக் குழு தலைவராக விஜய்யைத் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். மேலும், விஜய் முதல்வராக ஆதரவு தெரிவித்து உறுதிமொழி பத்திரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட்டனர்.

ஏற்கனவே ஆட்சியமைக்க ஆளுநருக்குத் தவெக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பான்மைக்குக் குறைவான இடங்களே உள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆதரவைத் திரட்ட சில கட்சிகளுடன் விஜய் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் அழைப்பு விடுப்பாரா அல்லது கூட்டணி ஆதரவுடன் விஜய் ஆட்சியமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory