» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு : கல்விச் சான்றிதழ் வாங்கச் சென்றபோது சோகம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:46:46 AM (IST)
கோவில்பட்டி அருகே சாலையோர தடுப்புச் சுவரில் பைக் மோதிய விபத்தி் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சவலாபேரியைச் சேர்ந்தவர் தில்லை சரவணன் (20). இவர் கோவில்பட்டி என்.ஜி.ஓ காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து, சில்லாங்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று முன்தினம் தனது கல்லூரிச் சான்றிதழ்களை வாங்குவதற்காக உறவினரின் பைக்கில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் ஆலயம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே அபினேஷ் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு பைக் மீதும் பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தில்லை சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த அபினேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தில்லை சரவணனின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை: வேல்முருகன் கோரிக்கை
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:20:15 AM (IST)

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே உக்கிரமாகும்..!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:14:35 AM (IST)

மூதாட்டி மீது மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு: தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:08:16 AM (IST)

குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:20:15 PM (IST)

தூத்துக்குடியில் வாட்டும் வெயில்: பசுமைப்பந்தல் அமைக்க ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மனு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:05:06 PM (IST)


