» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போதையில் தந்தையின் கடைக்கு தீவைத்த மகன்: பக்கத்து கடையும் எரிந்து ரூ.7 லட்சம் நாசம்!

வியாழன் 26, மார்ச் 2026 8:45:37 AM (IST)

கருங்குளம் பகுதியில், மதுபோதையில் தந்தையின் பழைய இரும்பு கடைக்கு மகனே தீ வைத்த சம்பவத்தில், அருகில் இருந்த மளிகை கடையும் எரிந்து சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அரசு மருத்துவமனை அருகே தங்கசாமி என்பவர் பழைய இரும்பு கடையும், ரகு சரவணன் என்பவர் மளிகை கடையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, தங்கசாமியின் மகன் வெற்றிவேல் (36) மதுபோதையில் தனது தந்தையின் இரும்பு கடைக்குத் தீ வைத்துள்ளார்.

தீ மளமளவென பரவி அருகில் இருந்த ரகு சரவணனின் மளிகை கடைக்கும் தொற்றியது. இதில் கடையிலிருந்த குளிர்சாதனப் பெட்டி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் என மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

செய்துங்கநல்லூர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வெற்றிவேலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தந்தையின் கடைக்கு மகனே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory