» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உடன்குடி அனல் மின்நிலையத்தில் ஜூனில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி!

வியாழன் 19, மார்ச் 2026 8:25:48 AM (IST)



உடன்குடி அனல் மின்நிலையத்தின் முதல் அலகில் வரும் ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் என மொத்தம் 1,320 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையத்தை ரூ.13,076 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகளைப் பாரத கனரக மின் நிறுவனம் (BHEL) மேற்கொண்டது.

இந்த அனல் மின்நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 13-ஆம் தேதி முதல் அலகின் மின் உற்பத்தியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது இந்த அலகில் மின் உற்பத்தியை முழு கொள்ளளவிற்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்துத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: உடன்குடி அனல் மின்நிலையத்தின் முதல் அலகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது மின் உற்பத்தி சுமார் 400 மெகாவாட்டை எட்டியுள்ளது. அடுத்த வாரம் முதல், அதன் முழு உற்பத்தித் திறனான 660 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் அலகுகள் இயக்கப்படும்.

அனைத்து தொழில்நுட்பச் சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த அலகில் இருந்து வணிக ரீதியிலான மின் விநியோகம் முழுமையாகத் தொடங்கும்," என அவர்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory