» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறது : ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஞாயிறு 8, மார்ச் 2026 8:45:55 PM (IST)

திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது, துன்பம் மட்டுமே மிச்சமாகும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுகவில் இருந்த தேவையற்ற களைகள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன. ஓ. பன்னீர்செல்வம் சென்ற இடம் 'ஆமை புகுந்த வீடு' போல மாறிவிடும். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அதிமுக இனி செழித்து வளரும். அதிமுகவை யாராலும் விழுங்க முடியாது. எங்களது கட்சியிலிருந்து சென்ற 'செல்லாக்காசுகளை' தான் தற்போது திமுக சேர்த்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களையும் சுரண்டி, ஒரே ஒரு குடும்பம் மட்டும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடும் இந்தக் குடும்ப ஆட்சியை வீழ்த்த வேண்டும். திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது, துன்பம் மட்டுமே மிச்சமாகும்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு நடக்காத நாளே இல்லை என்ற அவலநிலை நிலவுகிறது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இத்தகைய ஆட்சி தொடரக்கூடாது. திமுகவிற்குள் எப்போதும் குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory