» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதலில் 2பேர் பலி: தெக்ஷண மாற நாடார் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:13:52 PM (IST)
நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை முன்பு நின்றிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவில் அங்குள்ள டீக்கடை முன்பு நெல்சன் (55), ராமசாமி (80), பிரபாகரன் (50), மீரான்குளம் கணேசன் (50), இந்திராகாலனி ஜான் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், மதுபோதையில் அங்கிருந்த 6 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதுடன், பெட்ரோல் குண்டுகளையும் வீசிச் சென்றனர். தொடர்ந்து கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள் புகுந்த அக்கும்பல், அங்கிருந்த 3 பேரையும் வெட்டிவிட்டு ஒரு பைக்கையும் திருடிச் சென்றது.
இந்தத் தாக்குதலில் இந்திராகாலனி ஜான் மற்றும் செங்கல் சூளை தொழிலாளி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம், தமிழக அரசு மற்றும் காவல்துறையிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி: : தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதி
புதன் 4, மார்ச் 2026 5:51:53 PM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

சட்டத்தை நம்பியே வந்துள்ளேன்: அஜித்குமார் கொலை வழக்கில் பேராசிரியை நிகிதா பரபரப்பு பேட்டி
புதன் 4, மார்ச் 2026 4:30:54 PM (IST)

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர் நீக்கம்: கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே முடிவு
புதன் 4, மார்ச் 2026 4:15:36 PM (IST)

