» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

வியாழன் 19, பிப்ரவரி 2026 10:57:51 AM (IST)



அண்ணா அறிவாலாயத்தில் முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேமுதிக நிர்வாகிகள் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு, இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவுடன் கூட்டணி அமைப்பதாக உறுதி செய்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறது. தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் மற்றும் ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory