» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தகுதியற்ற நிலையில் உள்ள அரசுப் பேருந்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:53:19 PM (IST)

ஆறுமுகமங்கலம் கிராமம் வழியாக இயக்கப்படும் தரமற்ற அரசுப் பேருந்தினை பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமம் வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக மாற்றுப் பேருந்து வழங்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தடம் எண் 548 கொண்ட அரசுப் பேருந்து மிகவும் சிதிலமடைந்த நிலையில் இயங்கி வருகிறது. பேருந்தின் உடற்பகுதி மற்றும் இன்ஜின் தரம் பயணத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. பேருந்தின் உள்ளே இருக்கும் இருக்கைகள் அனைத்தும் அமர முடியாத அளவிற்கு உடைந்து, பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
பேருந்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால், மழைக்காலங்களில் பேருந்திற்குள்ளேயே நீர் கசிந்து பயணிகள் நனைய வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. இப்பேருந்தில் தினமும் பள்ளிச் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பயணித்து வருகின்றனர். பேருந்தின் மோசமான நிலையால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலமாக இந்தப் பேருந்தின் தரத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். தடம் எண் 548-ல் இயக்கப்படும் இந்த பழைய பேருந்தை நீக்கிவிட்டு, புதிய அல்லது நல்ல நிலையில் உள்ள மாற்றுப் பேருந்தை இந்த வழித்தடத்தில் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகமங்கலம் கிராம மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாடா ஆலையில் தயாரான முதல் கார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:40:59 PM (IST)

அன்புமணிதான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்: தலைமை தேர்தல் ஆணையம்..!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:27:33 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

கொடிக் கம்பங்கள் வழக்கு: தூத்துக்குடி, நெல்லை உட்பட 13 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:48:37 PM (IST)

வானவில் போல தமிழக வெற்றி கழகமும் மறைந்து விடும்: கடம்பூர் செ. ராஜூ பேச்சு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:16:01 PM (IST)

உடலில் பாட்டில்களைக் கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 12:48:10 PM (IST)


உண்மFeb 9, 2026 - 06:22:49 PM | Posted IP 172.7*****